தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவும், வணிக தொடர்புகளை உருவாக்கவும், உலக அளவில் வணிக வாய்ப்புகளை கண்டறியவும். அதன் மூலம் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற குளோபல் சோர்சிங் எக்ஸ்போ 2023 கண்காட்சியில் 20 கண்காட்சியாளர்களைக் கொண்ட தமிழ்நாடு அரங்கை தமிழக அரசு அமைத்துள்ளது.
இக்கண்காட்சியில் வீட்டு உபயோக ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.