மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்,முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் துணிநூல் துறை ஆணையர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட குழு ஜப்பான் நாட்டில், டோக்கியோ நகரில், 26-28, அக்டோபர் 2022 தேதிகளில் நடைபெற்ற “ஜப்பான்டெக்ஸ் 2022″ கண்காட்சியில் பங்கேற்றது. மேலும், இக்குழு ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (METI) அதிகாரிகளை சந்தித்து, ஜப்பானிய தொழில்முனைவோரை தமிழ்நாடு ஜவுளித் துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது.