தமிழ்நாடு அரசின் ஜவுளித் துறை, இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுடன் இணைந்து தொழில்நுட்ப ஜவுளி குறித்த கருத்தரங்கமானது கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் 17.11.2023 மற்றும் 18.11.2023 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான வாய்ப்புகள், சவால்கள், வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட வல்லுநர்கள், சிந்தனைவாதிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் ஆகியோர்களின் ஜவுளித்துறை தொடர்பான கருத்துப் பரிமாற்றம் இளைய தலைமுறையினர்கள் இடையே ஆர்வத்தினை ஊக்குவித்தது.